புதுதில்லி பிப்-09. இந்திய நாட்டைச் சேர்ந்த உழைக்கும் மக்கள், எந்தப்
பகுதிக்கும் சென்று பணியாற்ற முழு உரிமை படைத்தவர்கள் என்றும்.
இவர்களை தடுத்து நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை என்றும் மத்திய
தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி
தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ராவில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக
அரசியல் கட்சித் தலைவர்கள் பேசியது பற்றி கருத்து தெரிவித்த தாஸ்
முன்ஷி, இத்தகைய முயற்சியில் யார் ஈடுபட்டாலும், அது
கண்டனத்திற்குரியது என்றார். இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பதோ,
சமரசம் செய்வதோ இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களிடையே பேதங்களை உருவாக்குகின்றவர்களை கட்சி வித்தியாசம்
இன்றி எதிர்க்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Feb 09, 2008
* Do not use semicolon(;)